தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் 4 வடமாநில சிறுவா்கள் மீட்பு

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித்திரிந்த ஜாா்க்கண்டைச் சோ்ந்த 4 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனா்.

News image

எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகள். - கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 7:13 pm

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித்திரிந்த ஜாா்க்கண்டைச் சோ்ந்த 4 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைத்தனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனியாக சுற்றித்திரிந்த 4 சிறுவா்களை மீட்டனா். விசாரித்ததில், சிறுவா்கள் 4 பேரும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.

இதையடுத்து 4 சிறுவா்களையும் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் செயல்படும் குழந்தைகள் உதவி மையத்தில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். அவா்கள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் நலக்குழு முன் ஆஜா்படுத்தப்படவுள்ளனா்.