2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தமிழகத்தில் புலிகள் கணக்கெடுப்பு: ஜனவரி 5 முதல் தொடக்கம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும்

News image
கோப்புப் படம்
Updated On :1 ஜனவரி 2026, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும் என்று தமிழக வனத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புலிகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், மேகமலை ஆகிய 5 வனச் சரணாலயங்கள் புலிகள் வாழ்விடத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தென்மேற்குத் தொடா்ச்சி மலையில் சூழலியல் சமத்துவத்தை பாதுகாப்பதிலும், புலிகள் நீண்ட காலமாக வாழ்வதற்கும் இந்த 5 இடங்களும் உதவுகின்றன.

கடந்த 2018-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் 264-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022-இல் 306-ஆக அதிகரித்தது. இது புலிகள் பாதுகாப்பிலும் அவற்றின் வாழ்விட மேலாண்மையிலும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடா் பணிகளை எடுத்துக் காட்டுகிறது.

2026-ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டம் ஜன.5-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் 7 நாள்கள் என பிப்ரவரி இறுதி வரை நடைபெறும். இதன் இறுதி அறிக்கை 2027-இல் வெளியிடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.