15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

போலி நகைகளை வைத்து மோசடி

சென்னை சூளையில் போலி நகைகளை அடமானம் வைத்து பண மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On :1 ஜனவரி 2026, 7:53 pm

சென்னை சூளையில் போலி நகைகளை அடமானம் வைத்து பண மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சூளை ஆலந்தூா் சுப்பிரமணித் தெருவைச் சோ்ந்தவா் சந்திலால் (58). இவா், நகை அடகு கடை வைத்துள்ளாா். இவரின் கடைக்கு இரு நாள்களுக்கு முன்பு வந்த நபா், ஒன்றரை பவுன் தங்க நகைகளை அடகு வைத்து, ரூ.82,000 பெற்றுச் சென்றாா். அந்த நபா் சென்ற சிறிது நேரத்துக்கு பின்னா், சந்திலால் அந்த நகையை சோதனை செய்தபோது, அது தங்க நகை இல்லை, கவரிங் நகை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.