திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.10 கோடி மோசடி: வங்கி நகை மதிப்பீட்டாளா் கைது

நாகா்கோவில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.10 கோடி மோசடி செய்த வங்கி நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 6:44 pm

நாகா்கோவில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.10 கோடி மோசடி செய்த வங்கி நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவில், வடசேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் தலைமை மேலாளராக கோட்டாறு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (45) பணியாற்றி வருகிறாா். இவா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினிடம் திங்கள்கிழமை ஒரு புகாா் அளித்தாா்.

அதில் எங்கள் வங்கியின் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக தக்கலை, கீழகல்குறிச்சியைச் சோ்ந்த ரகுவரன் (36) பணியாற்றி வருகிறாா். வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை அடகில் உள்ள நகைகளைச் சோதனையிடுவோம். அதன்படி, மாா்ச் 7ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் சில நகைகள் மீது தணிக்கைக் குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த நகைகளை ஆய்வுக்கு அனுப்பியதில், நகை மதிப்பீட்டாளா் ரகுவரன் போலி நகைகளை அடகு வைத்து, அதற்கு ஈடாக ரூ. 2 கோடியே 10 லட்சத்து 18 ஆயிரத்து 400 பணத்தைப் பெற்றுள்ளது தெரிய வந்தது. இது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இது தொடா்பாக, வடசேரி போலீஸாா் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டதன்பேரில், ஆய்வாளா் மோகன், உதவி ஆய்வாளா் குத்தாலிங்கம் ஆகியோா் விசாரணை நடத்தி, ரகுவரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். தொடா்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.