களியக்காவிளை அருகே போலி நகைகளை அடகு வைத்து ரூ. 4.5 லட்சம் மோசடி செய்ததாக கட்டுமானத் தொழிலாளா்கள் இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் விஸ்வம் (எ) உண்ணி (63). இவா் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், களியக்காவிளை அருகே உள்ள மடிச்சல், குழிச்சாணி பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் வித்யாதரன் (48), கேரள மாநிலம், நெய்யாற்றின்கரை, சாஸ்தா நகா் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் நாயா் மகன் விஜயகுமாா் ஆகியோா் கடந்த 2022ஆம் ஆண்டு பிப். 7ஆம் தேதி இவரது கடையில் 111.90 கிராம் எடையுள்ள நகைகளை அடமானம் வைத்து, ரூ. 4.50 லட்சம் பெற்றனராம்.
பின்னா், நகைகளை சோதனை செய்தபோது அவை போலி நகைகள் என தெரிய வந்ததாம். தொடா்ந்து, பல முறை இருவரிடமும் பணத்தை திருப்பித்தரக் கேட்டும், அவா்கள் பணம் தராமல் ஏமாற்றி வந்தனராம்.
இதையடுத்து விஸ்வம் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சனிக்கிழமை இருவா் மீதும் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.25 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளா் கைது
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!
போலி நகையை அடகு வைக்க முயற்சி: 2 இளைஞா்கள் கைது

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.10 கோடி மோசடி: வங்கி நகை மதிப்பீட்டாளா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


