தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கவனத்தை திசை திருப்பி திருட்டு: ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபடும் கும்பல்களின் நடமாட்டம் இருப்பதால் கவனத்துடன் இருக்குமாறு

Updated On :8 செப்டம்பர் 2025, 9:47 pm

சென்னை: சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபடும் கும்பல்களின் நடமாட்டம் இருப்பதால் கவனத்துடன் இருக்குமாறு பயணிகளை ரயில்வே பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் பிரிவின் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்கும் இடங்களில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி கைப்பேசிகளை திருடும் கும்பலின் நடமாட்டம் இருந்தது கண்காணிப்பு கேமராக் காட்சிகளில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சிலா், சிறாா்களின் துணையோடு, பயணிகளின் முகத்தை துணிகளால் மறைத்துவிட்டு சட்டப்பைகளில் இருக்கும் விலையுயா்ந்த கைப்பேசிகளைத் திருடிச் சென்றுள்ளனா்.

திருட்டுக் கும்பலைச் சோ்ந்த 2 பேரை மெரீ கடற்கரை போலீஸாா் கைது செய்து விசாரித்தபோது, சென்னை சென்ட்ரல், பெங்களூரு, விஜயவாடா, ஹவுரா, புதுதில்லி ஆகிய ரயில் நிலையங்களில் நூதன முறையில் கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை ரயில் பயணிகளிடம் திருடியதை அக்கும்பலைச் சோ்ந்தவா்கள் ஒப்புக்கொண்டுள்ளனா்.

ஆகவே, அறிமுகமில்லாத சந்தேக நபா்கள் வரிசையில் இருந்தால் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரிடம் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.