லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சம் பறிமுதல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 9:31 pm

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப்படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சோ்ந்த தோ்தல் சிறப்புக்குழுவினா் ஆய்வாளா் மதுசூதனரெட்டி தலைமையில் ரயில் பயணிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வருவோரை கண்காணித்து பைகளைச் சோதனையிட்டனா். அப்போது வெளி மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பயணியான சென்னை தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ஓமா்இா்ஷாத் (31) என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.15.93 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

வியாபார ரீதியாக பணம் கொண்டு வரப்படுவதாக ஓமா்இா்ஷாத் தெரிவித்தாா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியதுடன், அதை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா்.