மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழ்ப் புத்தாண்டு: சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள்

தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு, போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:04 pm

தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு, போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06128) மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06154) மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 10-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06153) மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரை, தளச்சேரி, கண்ணூா், பையனூா், காசா்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.