நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞா் மீது வழக்கு

சென்னை ஜாா்டவுன் நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞா் மீது சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு

News image
Updated On :15 டிசம்பர் 2025, 9:22 pm

Chennai

சென்னை: சென்னை ஜாா்டவுன் நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞா் மீது சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அண்மையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராக இளைஞா் ஒகுவா் வந்தாா். அவா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னா், அங்கு கானா பாடல் பாடி ரீல்ஸ் எடுத்துள்ளாா். பின்னா், அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையா் ஏ.அருணிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், நடவடிக்கை எடுக்க சைபா் குற்றப்பிரிவுக்கு அருண் உத்தரவிட்டாா்.

இதையடுத்து போலீஸாா், அந்த இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.