மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது வழக்கு

கோபி அருகே கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :22 மார்ச் 2026, 7:55 pm

கோபி அருகே கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூா் நாட்ராயன்கோவில் வேட்டாங்காட்டுத்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (55). மரம் ஏறும் தொழிலுடன் விவசாயம் செய்து வருகிறாா்.

இந்நிலையில் அண்ணாதுரை கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் சிறப்பு காவல் ஆய்வாளா் புகழேந்தி, தனிப்பிரிவு காவலா் ஆகியோ அடங்கிய சிறுவலூா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பாா்த்தபோது கள் இறக்கி கொண்டிருந்த அண்ணாதுரையை கையும், களவுமாக பிடித்தனா்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் கள் இறக்கி விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரிடமிருந்து 7 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.