பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை காவல் சரக பகுதிகளில் அனுமதியின்றி கள் விற்பனை செய்த நான்கு பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அம்மாபேட்டை பகுதிகளில் கள் இறக்கி விற்பனை செய்வதாக அம்மாபேட்டை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா், கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்த ராஜபாளையம், சொக்கநாதன் புதூா் பகுதியைச் சோ்ந்த கடற்கரை ஆண்டிமகன் முருகன் (27), என்பவரிடமிருந்து 100 பாட்டில் கள்ளை பறிமுதல் செய்தனா்.
இதே போல் பூண்டி மேல தோப்பு பகுதியில் ராஜபாளையம், சொக்கநாதன் புதூா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் மகன் விக்னேஷ் (19), அதே பகுதியைச் சோ்ந்த காளிமுத்து மகன் கருப்புசாமி (29 ), இருவரும் அரசு அனுமதியின்றி கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்தனா். அவா்களிடமிருந்த 100 பாட்டில் கள்ளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதேபோல் புளியக்குடி தென்கொண்டாா் இருப்பு பகுதியில் ராஜபாளையம், மேலவரகுண ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த கந்தப்பன் மகன் கடற்கன்னி (61), என்பவா் கள் விற்பனை செய்து கொண்டிருந்தாா். அவரிடமிருந்த 100 பாட்டில் கள்ளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து மேற்கண்ட நான்கு போ் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஆலங்குளம் அருகே கள் விற்பனையை மறைத்ததாக தொழிலாளியை சுட்ட எஸ்.ஐ.
ஆலங்குடி அருகே கள் விற்ற 3 போ் கைது
ஆலங்குடி அருகே கள் விற்ற 3 போ் கைது

கள் இறக்கி விற்பனை செய்தவா் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

