திருத்தணி, நவ. 7: கனமழையால் அகூர்- நத்தம் செல்லும் தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்வோரும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருத்தணி ஊராட்சிக்கு உட்பட்டது அகூர்- நத்தம் செல்லும் சாலை. கோரமங்களம் அருந்ததி காலனி, தன்னுமோடு, ராஜூலுகண்டிகை, சத்திரம், மாம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம், ராமகிருஷ்ணாபுரம் மோட்டூர் ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் தினமும் இச்சாலையை கடந்துதான் திருத்தணி நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலையில் இருந்த சிறு பள்ளங்கள் பெரும் பள்ளங்களாக மாறி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டு சாலைப் பணிகள் நடைபெற்றது. சாலை சரியான முறையில் சீரமைக்காமல் விடப்பட்டதால் தற்போது பெய்த மழையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு அவற்றில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நத்தம் கிராமத்தில் செல்லும் சாலையில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்கள், மினி வேன்கள் சகதியில் சிக்கிக் கவிழும் நிலை உள்ளது.
திருத்தணி- சோளிங்கர் செல்ல இது குறுக்குச் சாலை என்பதால் தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வழியே செல்கின்றன. பைபாஸ் சாலைக்குச் செல்லும் கனரக வாகனங்கள் இதன் வழியாக வந்து செல்வதால் சாலை மேலும் பழுதடைந்துள்ளது.
அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இந்தச் சாலையை உடனே சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் இச்சாலையில் உள்ள மரணப்பள்ளங்களில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தவெக மனு!

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

