அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளரிடம் தாஜ் மஹாலின் வரலாறு தெரியுமா என ஈரான் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தனது மனைவியுடன் இந்தியாவிற்கு முதல்முறையாக அரசுமுறைப் பயணமாக வந்திருந்தார். பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய அவர் ஞாயிறன்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
பின்னர், தனது மனைவியுடன் நேற்று (மே 25) தாஜ் மஹாலைச் சுற்றிப் பார்க்கச் சென்ற ரூபியோ அங்கு எடுத்த புகைப்டத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஈரானிய தூதரகம் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து விமர்சித்துள்ளது. அதில், “தாஜ் மஹாலின் வரலாறு அல்லது கட்டிடக்கலை பற்றித் தெரிந்திருந்தால் ரூபியோ இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்க மாட்டார். பேரரசர் ஷாஜகான் தனது ஈரானிய மனைவியின் மீதுள்ள காதலால் ஈரானிய கட்டிடக் கலை நிபுணர்களை வைத்து இந்தக் நினைவுச் சின்னத்தைக் கட்டினார். தற்போது, ரூபியோவின் அரசு இன்று ஈரானின் நாகரிகத்தையே அழித்துவிடுவதாக அச்சுறுத்தி, பிற நாகரிகங்களையும் அவமதித்து வருகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் தொடர்பாக வெளியிட்ட பதிவு தாஜ் மஹாலை கட்டியது யார் என்ற விவாதத்திற்குள் சென்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுபோல, தாஜ்மஜால் பற்றி இருதரப்புகள் இணையத்தில் சண்டையிடுவது இது முதல்முறையல்ல.
ஈரானியர்கள் அடிக்கடி இவ்வாறு மற்றவர்களின் உழைப்பைத் தங்களுடையதாகக் கூறிக் கொள்வதாக இணையவாசிகள் விமர்சிக்கும் வேளையில் தாஜ் மஹாலில் உள்ள பெர்சிய மொழி கல்வெட்டைப் பகிர்ந்து அதனைக் கட்டியவருக்கும் ஈரானுக்கும் உள்ள தொடர்பை ஈரானியர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போர் 3 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடனான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ரூபியோ தெரிவித்திருந்த நிலையில் அதற்கு ஈரான் மறுப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.
Summary
Iranian Embassy questions US Secretary of State about taj mahal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

மேற்காசிய அமைதிக்கு இந்தியாவால் முக்கியப் பங்காற்ற முடியும்: ஈரான் வெளியுறவு அமைச்சா்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மூடல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



