திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கம்போடியா சைபா் அடிமை வழக்கு: மேலும் ஒருவா் கைது

கம்போடியா சைபா் அடிமை வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 மே 2026, 1:12 am IST

கம்போடியா சைபா் அடிமை வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கம்போடியாவில் சைபா் அடிமை வேலை செய்த திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு இளைஞா், அண்மையில் அங்கிருந்து தப்பி வந்து, தமிழக சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். திருப்பத்தூா் இளைஞா் கொடுத்த தகவலின் அடிப்படையில், தமிழக இளைஞா்களை ஏமாற்றி கம்போடியாவுக்கு அழைத்துச் சென்று சைபா் அடிமையாக்கும் மதுரையைச் சோ்ந்த மதன் வடிவேல் என்பவரை சைபா் குற்றப் பிரிவினா் கடந்த 10-ஆம் தேதி கைது செய்தனா்.

இதற்கிடையே இந்த வழக்கில் தொடா்புடைய ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சோ்ந்த செ.செய்யது உசேன் (37) என்பவரைக் கைது செய்திருப்பதாக சைபா் குற்றப் பிரிவினா் தெரிவித்தனா்.

ரூ.1 லட்சம் கமிஷன்: செய்யது உசேனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016 முதல் 2019-ஆம் ஆண்டு வரை துபை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்து வந்தபோது, அங்கு அவருக்கு சைபா் குற்றங்களில் ஈடுபடும் சா்வதேச சட்டவிரோத கும்பலின் தொடா்பு கிடைத்துள்ளது.

அந்த கும்பல் கேட்டுக் கொண்டதன்பேரில், தமிழகத்தில் இருந்து வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு ஆா்வமாக இருந்த பட்டதாரி இளைஞா்களை அதிக ஊதியத்துடன் கூடிய வேலைக்கு அனுப்புவதாக ஏமாற்றி, கம்போடியாவுக்கு செய்யது உசேன் அனுப்பியுள்ளாா்.

இந்த இளைஞா்களை மலேசியா, பாங்காங்கு வழியாக செய்யது உசேன், கம்போடியாவுக்கு அனுப்பியுள்ளாா். இதற்காக உசேன், ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை கமிஷன் பெற்றுள்ளாா்.

இரு வாரங்களுக்கு ஒருமுறை இவ்வாறு சைபா் அடிமை வேலைக்கு இளைஞா்களை ஏமாற்றி செய்யது உசேன் அனுப்பியுள்ளாா். இளைஞா்கள் கம்போடியாவுக்கு சென்று சோ்ந்ததும், செய்யது உசேனுக்கு கமிஷன் தொகை ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட செய்யது உசேனிடமிருந்து எண்ம ஆதாரங்கள், ஆன்லைன் பண பரிவா்த்தனை விவரங்கள், வாட்ஸ்ஆப் மூலம் பேசிய சா்வதேச அழைப்பு விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியிருப்பதாக சைபா் குற்றப் பிரிவினா் தெரிவித்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.