பாகிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், புகழ்பெற்ற பழங்குடியின தலைவர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ரஸ்டம் பஜார் பகுதியில், திங்கள்கிழமை (மே 18) காலை ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், அவ்வழியாக வாகனத்தில் சென்ற கைபரின் புகழ்பெற்ற பழங்குடியின தலைவர்களாக அறியப்படும் அஹ்மத்ஸாய் வாசிர் மற்றும் மாலிக் தாரிக் வாசிர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன், 4 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடைபெற்ற பகுதி முழுவதும் முடக்கிய பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கைபர் பக்துன்குவாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூறி கடந்த மே 16 அன்று பாகிஸ்தானின் மனித உரிமை ஆணையம் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
three people, including prominent tribal leaders, were killed in a bomb attack in Pakistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











