திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்!

நள்ளிரவில் ரஷியா மீது 500-க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது குறித்து...

News image

ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்... - கோப்புப் படம் | ஏபி

Updated On :17 மே 2026, 4:03 pm IST

ரஷியா தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து 500-க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ரஷியாவின் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி உறுதியளித்தார்.

இந்த நிலையில், மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய ரஷிய நகரங்களைக் குறிவைத்து நேற்று (மே 16) இரவு 550-க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், இதுவரை 1 பெண் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் ஏவிய சுமார் 556 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும்; அதில், 81 ட்ரோன்கள் மாஸ்கோ நகரைக் குறிவைத்து வீசப்பட்டவை எனவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில், அந்நகரங்களின் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இத்துடன், மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தின் அருகில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், உக்ரைன் நகரங்களைத் தாக்கும் நோக்கில் இன்று அதிகாலை ரஷியா ஏவிய 287 ட்ரோன்களில், சுமார் 279 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைனின் விமானப் படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Ukrainian military has launched attacks using more than 500 drones, targeting major cities in Russia, including the capital, Moscow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.