திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திய ஈரான்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்திவைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது தொடர்பாக...

News image

அமெரிக்கா / ஈரான் கொடிகள் - ஏபி

Updated On :1 ஜூன் 2026, 9:40 pm IST

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான அனைத்துத் தொடர் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

லெபனான், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடவுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் மூலம் நடைபெற்று வந்தது.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகளை ஈரான் தளர்த்தியது. ஈரான் எண்ணெய் வளங்கள் மீதான தடையையும் அமெரிக்கா ரத்து செய்தது.

எனினும் ஈரான் சில கோரிக்கைகளை முன்வைத்து, அதற்கு அமெரிக்கா உடன்பட்டால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது.

பேச்சுவார்த்தையை சுமூகமாக அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் வாஷிங்டன் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்கா உடனான அனைத்துத் தரப்பு பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

லெபனான், காஸா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அதனை நிறுத்தும் வரை மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Summary

Iran suspends talks with U.S. over Israel’s Lebanon strikes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.