ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மாலியில் பயங்கரவாதத் தாக்குதல்

மாலியில் பயங்கரவாதத் தாக்குதல்

News image

மாலியில் பயங்கரவாதத் தாக்குதல் - AP

Updated On :25 ஏப்ரல் 2026, 9:38 pm

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், தலைநகா் பமாகோ உள்பட நாடு முழுவதும் பல்வேறு ராணுவத் தளங்கள் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை ஒருங்கிணைந்த வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினா்.

அல்-கொய்தா, ஐ.எஸ். அமைப்புகளுடன் தொடா்புடைய ஆயுதக் குழுக்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ராணுவம் அறிவித்தது. அதேநேரம், வடக்கு மாலியில் உள்ள கிடால், கௌவ் நகர ராணுவத் தளங்களைக் கைப்பற்றியதாக ஆயுதக் குழுக்கள் கூறியுள்ளன.

மாலியில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், இத்தாக்குதல் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்ட ஒன்றாக ஆய்வாளா்கள் கருதுகின்றனா். பாதுகாப்புக் கருதி, தலைநகா் பமாகோவில் உள்ள சா்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.