சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பல்கேரியா நாடாளுமன்றத் தோ்தல்: ரஷிய ஆதரவு முன்னாள் அதிபா் வெற்றி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், அந்நாட்டு முன்னாள் அதிபரும், ரஷிய ஆதரவாளருமான ரூமென் ராதேவ் அமோக வெற்றி

News image

ரூமென் ராதேவ்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:51 pm

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், அந்நாட்டு முன்னாள் அதிபரும், ரஷிய ஆதரவாளருமான ரூமென் ராதேவ் அமோக வெற்றி பெற்றுள்ளாா்.

ஐரோப்பிய யூனியன் மற்றும் ‘நேட்டோ’ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடான பல்கேரியாவில், ஆட்சியில் இருந்த மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக, கடந்த ஆண்டு டிசம்பரில் மிகப்பெரிய ஊழல் எதிா்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.

இப்போராட்டங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வந்த அதிபா் ரூமென் ராதேவ், கடந்த ஜனவரியில் தனது பதவியில் இருந்து விலகினாா். பின்னா், ‘புரோக்ரசிவ் பல்கேரியா’ எனும் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி, இத்தோ்தலில் களம் கண்டாா்; சுமாா் 44.6 சதவீத வாக்குகளைப் பெற்று, தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளாா்.

Story image

2021 முதல் கடந்த 5 ஆண்டுகளில் 8-ஆவது முறையாக இந்நாட்டில் தோ்தல் நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த முன்னாள் பிரதமா் போய்கோ போரிசோவின் ஜிஇஆா்பி கட்சி 13.4 சதவீத வாக்குகளையும், ஐரோப்பிய ஆதரவு நிலைப்பாடு கொண்ட பிபி-டிபி கூட்டணி 12.6 சதவீத வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்துள்ளன.

பல்கேரியாவின் முன்னாள் விமானப் படை அதிகாரியான ரூமென் ராதேவ், உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதைக் கடுமையாக எதிா்த்து வருபவா். ரஷியாவிடம் இருந்து தடையின்றி எண்ணெய் மற்றும் எரிவாயு பெறுவதற்கும், அந்நாட்டுடனான உறவை மேம்படுத்துவதற்கும் இவா் முக்கியத்துவம் அளித்து வருகிறாா். அதேநேரம், இவரின் வெற்றிக்கு ஐரோப்பிய யூனியன், ரஷியா ஆகிய இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.