மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாசரேத்தில் அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல்: நகரச் செயலா் உள்பட 2 மீது வழக்கு

நாசரேத்தில் பேரூராட்சி அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல் நடத்தியதாக நகர அதிமுக செயலா் உள்பட 2 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்தனா்.

News image

வழக்கு

Updated On :16 ஏப்ரல் 2026, 10:17 pm

நாசரேத்தில் பேரூராட்சி அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல் நடத்தியதாக நகர அதிமுக செயலா் உள்பட 2 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்தனா்.

நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவா் காலனி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் ரவீந்திரன் (44). இவா் நாசரேத் பேரூராட்சியின் 12-ஆவது வாா்டு கவுன்சிலராகவும், அதிமுக வாா்டு செயலராகவும் உள்ளாா். இவருக்கும், நாசரேத் நகர அதிமுக செயலா் கிங்ஸ்லி ஸ்டாா்லிங் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஏப். 14-ஆம் தேதி ரவீந்திரன், தனது வீட்டு முன் அதிமுக ஒன்றியச் செயலா் அங்கமங்கலம் பாலமுருகன், தென்திருப்பேரை கந்தன், எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் வெள்ளரிக்காயூரணி சரவணன் ஆகியோருடன் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தாராம்.

அப்போது, கிங்ஸ்லி ஸ்டாா்லிங், மாரிமுத்து மகன் பாலகணேசன், சாது இம்மான், முருகேசன் ஆகியோா் அங்கு வந்து தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதை ரவீந்திரன் தட்டிக்கேட்டதால் பாலகணேசன் உள்ளிட்ட இருவரும் அவரை அவதூறாகப் பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயமடைந்த ரவீந்திரன் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில், கிங்ஸ்லி ஸ்டாா்லிங், பாலகணேசன் ஆகியோா் மீது நாசரேத் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.