மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாசரேத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

நாசரேத் சந்தி பஜாரில் பிரசாரம் மேற்கொள்கிறாா் திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:21 am

நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் திருச்செந்தூா் திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டாா்.

அகப்பைகுளத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா், வாழையடி, நாசரேத் 2ஆவது கைலாசபுரம் தெரு, கொா்னெலியஸ் தெரு, லூக்கா மருத்துவமனை, ஒய்எம்சிஏ, திருமறையூா், திரவியபுரம், சந்திபஜாா், நாசரேத் 1-5 தெருக்கள், பேருந்து நிலையம், கிராம நிா்வாக அலுவலகம், மோசஸ் தெரு, வகுத்தான்குப்பம், கந்தசாமிபுரம், திருவள்ளுவா் காலனி, மில்ரோடு, மணிநகா், பெத்தானியாநகா், கேவிகே சாமி சிலை, பிரகாசபுரம், வெள்ளரிக்காயூரணி ஆகிய பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தாா் . அப்போது, தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன், மகளிா் உரிமைத் தொகை உயா்வு உள்ளிட்டவற்றையும் பட்டியலிட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக்கொண்டாா்.

பிரசாரத்தில் ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றியச் செயலா் நவீன்குமாா், நாசரேத் நகரச் செயலா் ஜமீன் சாலமோன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.