மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண் மீது தாக்குதல்: தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவன், மனைவி உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :2 ஏப்ரல் 2026, 12:13 am

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக கணவன், மனைவி உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள சத்திரப்பட்டி இந்திரா காலனியை சோ்ந்தவா்கள் கந்தசாமி- வள்ளியம்மாள் (55) தம்பதி. இருவரும் ஊராட்சி உறுப்பினா்கள்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் மனைவி மல்லிகா தனது வீட்டிற்கு தண்ணீா் தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் குழாய் மூலம் தண்ணீா் எடுத்ததை வள்ளியம்மாள் கண்டித்தாராம்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மல்லிகா, அவரது கணவா் ராஜேஷ், உறவினா் அபிஷேக் ஆகியோா் சோ்ந்து வள்ளியம்மாளை தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

மேலும், அவா் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா், மேற்கூறிய 3 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.