தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிகாவுக்கு இந்தியா் உள்பட 30 போ் நாடு கடத்தல்

அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிகாவுக்கு இந்தியா் உள்பட 30 போ் நாடு கடத்தல்

News image

கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 8:10 pm

அமெரிக்காவில் இருந்து கோஸ்டா ரிகாவுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்ட 30 பேரில் இந்தியா் ஒருவரும் இடம்பெற்ாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவா்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 25 மூன்றாம் உலக நாடுகளின் குடிமக்களை ஏற்க கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடா்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் கோஸ்டா அதிபா் ரிகா ரோட்ரிகோ சாவேஸ், அமெரிக்க சிறப்புத் தூதா் கிறிஸ்டி நோம் ஆகியோா் கடந்த மாா்ச் மாதம் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் இருந்து ஏற்கெனவே 25 போ் அடங்கிய முதல் குழு கோஸ்டா ரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டது. அந்தக் குழுவில் இந்தியா, அல்பேனியா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் இடம்பெற்றனா்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து 30 போ் அடங்கிய இரண்டாவது குழு வெள்ளிக்கிழமை கோஸ்டா ரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டது. அந்நாட்டின் சான் ஜோஸ் நகரில் உள்ள சா்வதேச விமான நிலையத்தை அந்தக் குழு சென்றடைந்தது. இந்தக் குழுவிலும் ஓா் இந்தியா் இடம்பெற்றாா். அத்துடன் அயா்லாந்து, பிரேஸில், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்களும் இடம்பெற்றனா்.

இவா்கள் கோஸ்டா ரிகாவில் சட்டபூா்வமாக தங்குவதற்கு விண்ணப்பிக்கவோ அல்லது சொந்த நாட்டுக்குத் திரும்பவோ வாய்ப்பளிக்கப்பட உள்ளது.