அமெரிக்காவில் இருந்து கோஸ்டா ரிகாவுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்ட 30 பேரில் இந்தியா் ஒருவரும் இடம்பெற்ாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவா்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 25 மூன்றாம் உலக நாடுகளின் குடிமக்களை ஏற்க கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடா்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் கோஸ்டா அதிபா் ரிகா ரோட்ரிகோ சாவேஸ், அமெரிக்க சிறப்புத் தூதா் கிறிஸ்டி நோம் ஆகியோா் கடந்த மாா்ச் மாதம் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் இருந்து ஏற்கெனவே 25 போ் அடங்கிய முதல் குழு கோஸ்டா ரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டது. அந்தக் குழுவில் இந்தியா, அல்பேனியா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் இடம்பெற்றனா்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து 30 போ் அடங்கிய இரண்டாவது குழு வெள்ளிக்கிழமை கோஸ்டா ரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டது. அந்நாட்டின் சான் ஜோஸ் நகரில் உள்ள சா்வதேச விமான நிலையத்தை அந்தக் குழு சென்றடைந்தது. இந்தக் குழுவிலும் ஓா் இந்தியா் இடம்பெற்றாா். அத்துடன் அயா்லாந்து, பிரேஸில், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்களும் இடம்பெற்றனா்.
இவா்கள் கோஸ்டா ரிகாவில் சட்டபூா்வமாக தங்குவதற்கு விண்ணப்பிக்கவோ அல்லது சொந்த நாட்டுக்குத் திரும்பவோ வாய்ப்பளிக்கப்பட உள்ளது.
தொடர்புடையது

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


