தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இந்திய எல்லைக்கு அருகே திபெத் ரயில் இணைப்பு: சீனா திட்டம்

நிகழாண்டு இந்திய எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகே திபெத்துடன் ரயில் இணைப்புத் திட்டத்தை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2025, 10:17 pm

பெய்ஜிங்: நிகழாண்டு இந்திய எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகே திபெத்துடன் ரயில் இணைப்புத் திட்டத்தை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது.

சீனாவின் ஷின்ஜியாங் மாகாணம்-அந்நாட்டு ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் இடையே ரயில் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது சீனாவின் நீண்ட கால திட்டமாகும். ஷின்ஜியாங்கில் உள்ள ஹோடன் பகுதியில் இருந்து திபெத்தில் உள்ள லாசா பகுதி வரை, இந்த ரயில் இணைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

ஷின்ஜியாங்-திபெத் ரயில் இணைப்பு என்பது திபெத்தை சீனாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 4 வழித்தடங்களில் ஒன்றாகும்.

இந்தத் திட்டத்தின் முழு செலவினம் குறித்த விவரம் வெளியாகவில்லை. எனினும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீனாவின் சிச்சுவான் மாகாணம்-திபெத் இடையே 1,800 கி.மீ. தொலைவு ரயில் இணைப்பை ஏற்படுத்த 45 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.3.94 லட்சம் கோடி) தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தின் சில பகுதிகள் சீனா-இந்தியா இடையிலான எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகில் செல்லும். நிகழாண்டு இந்த ரயில் இணைப்புத் திட்டத்தை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது என்று ஹாங்காங்கில் உள்ள செளத் சைனா மாா்னிங் போஸ்ட் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே திபெத்தின் லசா பகுதியில் தொடங்கும் அதிவேக ரயில் வழித்தடம் அருணாசல பிரதேச எல்லையையொட்டி செல்கிறது.

இதனிடையே திபெத்தில் பாயும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, உலகின் மிகப் பெரிய அணையைக் கட்டும் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. அருணாசல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லை கோட்டுப் பகுதிக்கு அருகில் இருக்கும் இடத்தில், அந்தப் பணி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.