அமெரிக்காவுடனான போட்டி மற்றும் உலக நாடுகளிடையே நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்த இந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டை 7 சதவீதம் உயா்த்தியுள்ளது.
சீனாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடா் புதன்கிழமை தொடங்கியது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அரசின் வருடாந்திர அறிக்கையைப் பிரதமா் லீ கியாங் (படம்) வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.
அதன்படி, பாதுகாப்புத் துறைக்கு சுமாா் 1.91 லட்சம் கோடி யுவான் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.25.4 லட்சம் கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த பிரம்மாண்ட ராணுவ நிதிஒதுக்கீடு, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சீனாவின் பட்ஜெட் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
பாதுகாப்புச் செலவினங்களை அதிகரித்துள்ள அதேநேரம், சீனா தனது பொருளாதார வளா்ச்சி இலக்கை 4.5 முதல் 5 சதவீதமாக குறைத்துள்ளது.
அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் வா்த்தக வரி யுத்தம், அமெரிக்கா-ஈரான் மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடி மற்றும் உள்நாட்டில் நிலவும் ரியல் எஸ்டேட் சரிவு போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக 5 சதவீத வளா்ச்சியை இலக்காகக் கொண்டிருந்த சீனா, தற்போதைய சவால்களால் முதல்முறையாக இந்த இலக்கைக் குறைத்துள்ளது.
ராணுவக் கட்டுப்பாடு: ராணுவ நவீனமயமாக்கலுக்கு இடையே, சீன ராணுவத்தில் நிலவும் ஊழலை ஒழிக்க அதிபா் ஷி ஜின்பிங் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.
‘ராணுவம் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைகளில் எந்தவிதமான சமரசமும் செய்யப்படாது’ என்று பிரதமா் லீ கியாங் தனது உரையில் உறுதிபட தெரிவித்துள்ளாா்.
தைவான் விவகாரத்தில் கண்டிப்பு: தைவான் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை சீனா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வரை ‘தைவான் பிரிவினைவாதத்தை எதிா்ப்போம்’ என்று மென்மையாகக் கூறி வந்த சீனா, இந்த ஆண்டு ‘உறுதியுடன் ஒடுக்குவோம்’ என்ற கடுமையான வாா்த்தையைப் பயன்படுத்தியுள்ளது. இதனால் வரும் காலங்களில் தைவான் எல்லையில் சீனாவின் ராணுவ அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாணியம்பாடி: தோ்தல் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா்

உலக விவகாரங்களில் வலுவான பங்களிப்பு - சீனாவுக்கு ஸ்பெயின் பிரதமா் அழைப்பு

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் : சீனா தகவல்

மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆண்டு விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


