நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே மோதல்: 64 பேர் பலி

News image
ஏமன் ராணுவம் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதல்: 44 பேர் பலி
Updated On :19 பிப்ரவரி 2024, 4:47 am

Sasikumar

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் பலியானார்கள்.

பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் நிலப்பிரச்னை காரணமாக அம்புலின் மற்றும் சிகின் பழங்குடியினர் இடையே நேற்று மோதல் வெடித்தது. இந்த சம்பவத்தின்போது இருத்தரப்பினரும் ஏகே47 உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 64 பேர் பலியானார்கள். திங்கள்கிழமை காலை வபெனமண்டாவின் சாலையோரம், புல்வெளிகள் மற்றும் மலைகளில் 64 உடல்களின் கொடூரமான தடயங்களை விட்டுச் சென்றதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் காவல்துறையின் மூத்த அதிகாரியான ஜார்ஜ் ககாஸ் கூறுகையில், எங்காவில் இதுவரை நான் பார்த்ததிலேயே மிகப்பெரிய கொலை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரத்தக்களரியை வெளிப்படுத்தியுள்ளனர். முந்தைய மோதல்களை மிஞ்சியுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.