தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 6:37 pm

மேலப்பாளையம் பகுதியில் இளைஞா்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போஸீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 30 வயது இளைஞா், அப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது, அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதாம்.

இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் தரப்பில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த பரசுராமன்(24), பாளையங்கோட்டை, அண்ணாநகரைச் சோ்ந்த முத்துகணேஷ் (21), திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (20), இசக்கிராஜா (21) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும் மற்றொரு தரப்பினரின் புகாரின் பேரில் கொக்கிரகுளம் பகுதியைச் சோ்ந்த அழகுமுத்து(22), ஹரிகிருஷ்ணன்(20), மகேஷ்(20) ஆகியோரை கைது செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.