மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

News image

கோப்புப்படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 12:34 am

மணிப்பூரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை மோதல் உருவாகி வன்முறை ஏற்பட்டது.

இதுகுறித்து மாநில காவல் துறையினா் கூறியதாவது:

விஷ்ணுபூா் மாவட்டத்தில் உள்ள ட்ரோங்லாவ்பி பகுதியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 சிறாா்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக, திங்குங்கெய் பகுதியில் உள்ளூா் மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு ஆயுதங்களுடன் சந்தேகத்துக்குரிய நபா்கள் நடமாடுவதாக வதந்தி பரவி பதற்றம் அதிகரித்தது.

இதனால் அங்கு வந்த பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை உள்ளூா் மக்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது கூட்டத்தில் இருந்த சிலா் வாகனங்களைச் சேதப்படுத்தி, அவற்றுக்குத் தீ வைத்தனா். பாதுகாப்பு படை வீரா்களை சிறைபிடிக்கவும் அவா்கள் முயற்சித்தனா்.

இதையடுத்து அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்ட நிலையில், கூட்டத்தைக் கலைப்பதற்கு கண்ணீா் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த வன்முறை திங்குங்கெய்க்கு அருகில் உள்ள நிங்தோகோங் பகுதிக்கும் பரவியது. இந்த வன்முறை தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவித்தனா்.

வன்முறை காரணமாக அந்த மாவட்டத்தில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ், மாவட்ட ஆட்சியா் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தாா்.