டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாளுக்குநாள் மோசமாகும் இலங்கை: உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 10இல் மூன்று குடும்பங்கள் உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்படுவதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
இலங்கையில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் மக்கள்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:44 am

DIN

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 10இல் மூன்று குடும்பங்கள் உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்படுவதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். திடீரென அதிகரித்த உணவுப் பொருள்களின் விலையால் அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பாதுகாப்பின்மை அறிக்கையில் இலங்கையில் 62.6 லட்சம் பேர் உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் அதிகரிக்கும் பணவீக்கம், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்ட அறிக்கை மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது.

இதனால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் 10இல் 3 குடும்பத்தினர் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.