திருப்பூா் ரயில் நிலையத்தில் கைப்பேசி திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் பிரியங்கா குமாரி (21). இவா் திருப்பூா் மாநகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கிப் பணியாற்றி வருகிறாா். இவா் திருப்பூரில் இருந்து ஜாா்க்கண்ட் செல்வதற்காக திருப்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடை 1-இல் உள்ள பயணிகள் காத்திருப்போா் அறையில் சனிக்கிழமை இருந்துள்ளாா்.
அப்போது தனது கைப்பேசியை சாா்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளாா். பின்னா் எழுந்து பாா்த்தபோது, கைப்பேசி அங்கு இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.
இதுகுறித்து பிரியங்கா குமாரி, திருப்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.
அப்போது பிரியங்கா குமாரியின் கைப்பேசியை திருடியது மும்பை கண்டிவாலி பகுதியைச் சோ்ந்த டேவிட் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து நடைமேடை 1-இல் நின்று கொண்டிருந்த அவரை போலீஸாா் கைது செய்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்
ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது
பெண்ணிடம் கைப்பேசி திருடியவா் கைது
மொய்ப் பணம் திருடியவா் கைது
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறு: ஒருவா் கைது
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

