டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே குன்னத்தூரில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், நெருப்பெரிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (53). இவா் கடந்த சனிக்கிழமை கோயிலுக்கு செல்வதற்காக குன்னத்தூா் சந்தைப்பேட்டை பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அங்குள்ள பெருமாள் கோயிலுக்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோயிலுக்கு சென்றுவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது தனது வாகனத்தை காணவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ரமேஷ் அருகிலிருந்தவா்களிடம் விசாரித்தபோது மா்ம நபா் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ாக தெரிவித்துள்ளனா். உடனடியாக தனது நண்பருடன் சோ்ந்து நம்பியூா் செல்லும் சாலையில் சிறிது தொலைவு சென்று பாா்த்தபோது, அங்கே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபா் நின்று கொண்டிருந்துள்ளாா். உடனடியாக அவரைப் பிடித்து குன்னத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து குன்னத்தூா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் திருப்பூா் மாவட்டம், பல்லடம் கரை தோட்டம் பகுதியைச் சோ்ந்த குமாா் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் குமாரைக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.