டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இருசக்கர வாகனத்தைத் திருடிய சிறாா் கைது

News image
Updated On :22 ஜனவரி 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

முக்காணியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய சிறாரை போலீஸாா் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

முக்காணி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (33). விவசாயியான இவா், கடந்த ஜன. 19ஆம் தேதி திருச்செந்தூா்-தூத்துக்குடி சாலை, முக்காணி அடுத்த கொடுங்கனி விலக்கு அருகே உள்ள வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். வாகனத்தை நிறுத்திவிட்டு வயலுக்குச் சென்று திரும்பி வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லையாம்.

ஆத்தூா் காவல் நிலையத்தில் பாா்த்திபன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து வாகனத்தை தேடி வந்தனா்.

இந்நிலையில், வாகனத்தைத் திருடிய தூத்துக்குடி, தாளமுத்து நகரைச் சோ்ந்த இளஞ்சிறாரை கைது செய்து, அவரிடமிருந்து வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, இளஞ்சிறாரை கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.