பெய்ஜிங்: தலைநகர் பெய்ஜிங்கில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் மரணம் அடைந்ததாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா அலை மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பல வாரங்களுக்குப் பிறகு, கரோனாவுக்கு இரண்டு பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 4ஆம் தேதிக்குப் பிறகு சீனாவில் கரோனாவுக்கு யாரும் பலியானதாக சுகாதாரத் துறை அறிவிக்கவில்லை. ஒரு பக்கம் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து, அதனைத் தடுக்க நாடு பல கட்டுப்பாடுகளை அறிவித்து. அதற்கெதிராக நாட்டு மக்கள் கிளர்த்தெழுந்த நிலையில், கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டன.
கரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால், நாட்டில் உண்மையான கரோனா பாதிப்பு நிலவரம் தெரியவராமல் போனது. பல இடங்களில் கரோனாவுக்கு பலியானோரின் உடல்கள் தகன மையங்களுக்கு வந்து கொண்டிருப்பதாக புகைப்படங்கள் பகிரப்பட்டாலும், கடந்த சில வாரங்களாக சீனத்தில் கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்பதே அந்நாட்டு அரசின் தகவல்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இதுவரைக் காட்டப்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.80 லட்சம், மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5,237 ஆகக் கூறப்படுகிறது.
ஆண்டு இறுதியில், குறிப்பாக நவம்பர் மாதத்தில் சீனாவில் கரோனா அலை அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, மீண்டும் உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு பரவத் தொடங்குமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


