டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில், மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புலனயாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image
மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு (கோப்பிலிருந்து..)
Updated On :1 பிப்ரவரி 2024, 9:05 am

IANS

கீவ்: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில், மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புலனயாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தி ரேடியோ லிபெர்ட்டி வெளியிட்டிருக்கும் தகவலில், பிளானெட் லேப்ஸ் செயற்கைக்கோள் எடுத்தனுப்பிய புகைப்படங்களை, சான் பிரான்ஸிக்கோவை தலைமையகமாகக் கொண்ட புவியியல் புகைப்பட நிறுவனம், மரியுபோலின் ஸ்டார்யி க்ரிம் கிராமத்தில் 200 மீட்டர் அகலம் கொண்ட மிகப்பெரிய புதைகுழி இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

முதல் புகைப்படம் மார்ச் 24ஆம் தேதி எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில், 3 மிகநீண்ட பள்ளங்கள் இருப்பதும், அதில் ஒன்று 60 - 70 மீட்டர் நீளம் கொண்டதாகவும், உக்ரையின்ஸ்கா பிராவ்டா வெளியிட்ட அறிக்கை மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

அதன்பிறகு ஏப்ரல் 7ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம், அந்த நீண்ட பள்ளமானது பெரிதாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில பகுதிகளில் பள்ளமானது வெகு அண்மையில் தோண்டி மூடப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுளள்து.

இறுதியாக, ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம், புதிதாக மிகப்பெரிய புதைகுழி தோண்டப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. இதன் நீளம் 200 மீட்டர் அளவுக்கு இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்யி க்ரிம் கிராமத்தை மார்ச் 10ஆம் தேதி ரஷிய படைகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.