/

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து: 8 பேர் காயம்

வடகிழக்கு சீனாவின் துறைமுக நகரமான டாலியனில் திங்கள்கிழமை இயற்கை எரிவாயு குழாய் வெடித்ததில் எட்டு பேர் காயமடைந்தனர், 3 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

8 injured, 3 missing in gas pipeline explosion in China

Updated On :25 ஜனவரி 2021, 6:31 am

வடகிழக்கு சீனாவின் துறைமுக நகரமான டாலியனில் திங்கள்கிழமை இயற்கை எரிவாயு குழாய் வெடித்ததில் எட்டு பேர் காயமடைந்தனர், 3 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

டேலியன் ஜின்ஜோ மாவட்டத்தில் இன்று காலை 6 மணியளவில் இந்த எரிகுழாய் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து எட்டு பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தீ கட்டுப்படுத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் இயற்கை எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.