திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மாரடைப்பால் துடித்தவரை சாதுர்யமாக காப்பாற்றிய செல்ல நாய்

மாரடைப்பு ஏற்பட்டு துடித்த தனது எஜமானரின் செல்லிடப்பேசியை அவர் வளர்த்து வந்த நாய் நகர்த்திக் கொண்டு வந்து கொடுத்து, அவர் உடனடியாக அவசர அழைப்பை மேற்கொண்டு உதவி பெற உதவியுள்ளது.

News image
மாரடைப்பால் துடித்தவரை சாதுர்யமாக காப்பாற்றிய செல்ல நாய்
Updated On :27 ஜனவரி 2024, 7:27 pm

DIN

மாரடைப்பு ஏற்பட்டு துடித்த தனது எஜமானரின் செல்லிடப்பேசியை அவர் வளர்த்து வந்த நாய் நகர்த்திக் கொண்டு வந்து கொடுத்து, அவர் உடனடியாக அவசர அழைப்பை மேற்கொண்டு உதவி பெற உதவியுள்ளது.

நாய் எப்போதும் மனிதர்களின் நண்பன் என்பது இந்த சம்பவம் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்ல, மாரடைப்பால் துடித்த தனது எஜமானரை விட்டுச் செல்லாமல், அவரது முகத்தை நாக்கால் தடவிக் கொடுத்து அவர் விழிப்புடன் இருக்கச் செய்துள்ளது அவர் வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான ஸேடி. நியூ ஜெர்ஸியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

அதன் முதல் உரிமையாளர், வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்த போது, அதனை விலங்குகள் இல்லத்தில் சேர்ப்பித்துவிட்டார். அங்கு தனிமையில் வாடி வந்த இந்த ஸேடியை சில மாதங்களுக்கு முன்புதான் பிரையன் எடுத்துச் சென்று வளர்த்து வந்தார்.

ஸேடியைப் பார்த்ததுமே பிரையனுக்குப் பிடித்துவிட்டது. அதன் புத்திக் கூர்மை, அறிவு போன்றவற்றால் அவர் ஸேடியை வளர்க்க விரும்பினார். ஸேடிக்கும் பிரையனுக்கும் நல்ல நட்புறவு உருவானது. இதனால் பிரையன் தனது வீட்டுக்கு ஸேடியைக் கொண்டு சென்று வளர்த்து வந்தார்.

இந்த நிலையில்தான் பிரையன் மாரடைப்பு ஏற்பட்டு தவித்த போது, ஸேடி அவருடன் இருந்து அவரது உயிரைக் காக்க உதவியுள்ளது. இந்த தகவலை புகைப்படத்துடன் விலங்குகள் பராமரிப்பு இல்லம் தரப்பில் பகிரப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.