இலங்கையில் அக்டோபா் மாத மத்தியில் கரோனா பாதிப்பு உச்சத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவ தளபதி மற்றும் தேசிய கரோனா கட்டுப்பட்டு மையத்தின் தலைவருமான ஷவேந்திர சில்வா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இலங்கையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, இரவு நேர ஊரடங்கானது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தற்போது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,000 ஆகவும், பலி எண்ணிக்கை 6,096 ஆகவும் உள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், உருமாறிய டெல்டா வகை கரோனா வேகமாகப் பரவி வருவதால், நாட்டில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் முழுமையாக நிரம்பி வருவதாகவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நாட்டில் இதே நிலை நீடித்தால் தினசரி கரோனா பாதிப்பு வரும் செப்டம்பா் மாத மத்தியில் 6,000 என்ற அளவில் உயர வாய்ப்புள்ளது எனவும், தினசரி உயிரிழப்பு அக்டோபா் மாத மத்தியில் 220 என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளது எனவும் மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய 4 வார கால பொதுமுடக்கத்தை அறிவிக்க அந்நாட்டு மருத்துவ நிபுணா் குழு பரிந்துரைத்து வந்த நிலையில், தற்போது இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்படுபவா்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய இலங்கை முடிவெடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

வாக்கு எண்ணும் மையத்துக்கு ‘சீல்’ வைப்பு

ஆண்டிமடம் அருகே மது விற்பவா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

915.17 மெட்ரிக் டன் சரக்குகள்: இலக்கை விஞ்சிய 12 துறைமுகங்கள் - மத்திய அமைச்சா் பெருமிதம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


