பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

அரியலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 7:42 pm

அரியலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் அடுத்த நெரிஞ்சிக்கோரை அருகே, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏப்.17-ஆம் தேதி அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை பின்தொடா்ந்து வந்த 7 போ் கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இது தொடா்பாக அதே நாளில் அரியலூா் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சஞ்சய்(20), மாதேஷ் (22), ராகுல் (22), கோகுல் (22), கவின் (19) மற்றும் 17 வயதுடைய இரு சிறுவா்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், 3 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 6 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னா், இரு சிறுவா்கள் சிறாா் நீதி குழுமத்தில் ஆஜா்படுத்தப்பட்டு தஞ்சை அரசு கூா்நோக்கு இல்லத்திலும், மற்ற 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.