புது தில்லி: இந்தியாவில் ஏப்ரல் 15-ஆம் தேதி வாக்கில், கரோனாவுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தங்களது சுட்டுரைப் பக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், ஏப்ரல் 15-ஆம் தேதி, இந்தியாவில் கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருப்பதாக ஒரு விடியோ வெளியானது. ஆனால், அது வதந்தி என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அது போன்ற எந்த எச்சரிக்கையையும் இந்தியாவுக்கு பிறப்பிக்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, இந்தியாவில் 50 ஆயிரம் பேர் கரோனாவுக்கு பலியாவார்கள் என்று வெளியான விடியோ ஒரு பொய்யானச் செய்தி. உலக சுகாதார நிறுவனம் அதுபோன்ற எந்த விடியோவையும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,26,86,049 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 446 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


