ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தியாவுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை: உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் ஏப்ரல் 15-ஆம் தேதி வாக்கில், கரோனாவுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

News image

இந்தியாவுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை: உலக சுகாதார நிறுவனம்

Updated On :6 ஏப்ரல் 2021, 7:55 am


புது தில்லி: இந்தியாவில் ஏப்ரல் 15-ஆம் தேதி வாக்கில், கரோனாவுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தங்களது சுட்டுரைப் பக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், ஏப்ரல் 15-ஆம் தேதி, இந்தியாவில் கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருப்பதாக ஒரு விடியோ வெளியானது. ஆனால், அது வதந்தி என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அது போன்ற எந்த எச்சரிக்கையையும் இந்தியாவுக்கு பிறப்பிக்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது, இந்தியாவில் 50 ஆயிரம் பேர் கரோனாவுக்கு பலியாவார்கள் என்று வெளியான விடியோ ஒரு பொய்யானச் செய்தி. உலக சுகாதார நிறுவனம் அதுபோன்ற எந்த விடியோவையும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96,982 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,26,86,049 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் 446 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.