கோவையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
உக்கடத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன் சந்தைக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூா் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
அசைவப் பிரியா்கள் பெரும்பாலானோா், கோழி இறைச்சிக்குப் பதிலாக கடல் மீன்களை விரும்பி வாங்குகின்றனா். இதனால் கடந்த சில வாரங்களாக கோவை, உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மீன் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மத்தி மீன் கிலோ ரூ.120, அயிரை ரூ.100, இறால் ரூ.350, வஞ்சிரம் ரூ.250, சங்கரா ரூ.200, வாவல் ரூ.250, பாறை ரூ.200, செம்மீன் ரூ.400, நண்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!

கடலூா் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து குறைவால் விலை உயா்வு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


