ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்து, கிறிஸ்துவர்களுக்கு உணவு கிடையாது: பேரிடரிலும் புத்திவராத பாகிஸ்தான்

உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடி வரும் நிலையிலும், பாகிஸ்தான் அரசோ மத ரீதியில் மக்களைப் பிரித்து உணவு வழங்கி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2020, 9:28 am


கராச்சி: உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடி வரும் நிலையிலும், பாகிஸ்தான் அரசோ மத ரீதியில் மக்களைப் பிரித்து உணவு வழங்கி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், உணவு வழங்கல் துறை அதிகாரிகள், அரசு வழங்கும் நிவாரணப் பொருட்களை வழங்குவதில்லை என்றும், இந்த நிவாரணம் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே என்று தெரிவிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள அரசு அதிகாரிகள் எங்களுக்கு உதவுவதில்லை. பொது வழங்கல் துறையின் உணவுகளைக் கூட வழங்க மறுக்கிறார்கள். நாங்கள் அங்கு சிறுபான்மையினராக இருப்பதால் எங்களுக்கு இந்த நிலை என்று இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொது வழங்கல் துறை மூலம் பொருட்கள் வாங்க குவிந்த மக்களில் இந்துக்களும் இருந்தனர். இந்த பொருட்கள் அனைத்தும் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே என்று அதிகாரிகள் கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

போதிய உணவின்றியும், தொழில்கள் முடங்கியதால் பணமின்றியும் ஏராளமான இந்துக்கள் தவித்து வருவதாகவும், எங்களுக்கு தனியாக உணவு பொருட்கள் டிரக்கில் வருகிறது என்று அதிகாரிகள் கூறி எங்களை திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். ஆனால் எந்த டிரக்கிலும் எங்களுக்கான உணவு வரவில்லை என்று வருத்தத்தோடு கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.