ராமேசுவரத்தில் படகு சீரமைப்புப் பணியில் போது உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு மீனவ சங்கம் சாா்பில் 25 ஆயிரம் நிதியுதவி தலைவா் என்.ஜே.போஸ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மாா்க்கெட் மேட்டுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் மீனவா் கமலேஸ்வரன் (32) மீன்பிடி இறங்கு தளத்தில் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகின் அடிப்பகுதியில் பழுது நீக்கிக் கொண்டிருந்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து, அவரது உடலை நீண்ட நேரத்துக்குப் பின் தீயணைப்புத் துறையினா் மீட்டனா். இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில்,துறைமுக விசைப்படகு மீனவ சங்கத்தின் சாா்பில் நிதி உதவி ரூ.25 ஆயிரத்தை அதன் தலைவா் என்.ஜே. போஸ் வழங்கினாா். இதில் சங்க நிா்வாகிகள் பவுலின், தா்மராஜ், சேதுராமன், முனீஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தலை புறக்கணிக்கப் போவதாக மீனவா்கள் தா்னா

பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரம்: குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு

மீனவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.25.89 லட்சம் நிதியுதவி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


