ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தியாவை அழிக்க எங்களிடம் 125 -250  கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் உள்ளன: அதிர வைத்த பாகிஸ்தான் அமைச்சர் 

இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தை அழிக்க எங்களிடம் 125 -250  கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் உள்ளன என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 செப்டம்பர் 2019, 12:10 pm

இஸ்லாமாபாத்: இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தை அழிக்க எங்களிடம் 125 -250  கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் உள்ளன என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் நன்கானா சாஹிப் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே நிலையமொன்றை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

இந்தியாவில் குறிப்பிட்ட எந்த ஒரு இடத்தையும் தாக்கி அழிக்க வல்ல 125 -250  கிராம் எடையுள்ள அணுகுண்டுகள் எங்களிடம்  உள்ளன.

மோடியின் சிந்தனைகள் என்பது காந்தி மற்றும் நேருவின் சிந்தனைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன.

இந்தியா இரண்டு மிகப்பெரிய தவறுகளைச் செய்துள்ளது. பாகிஸ்தான் இதுபோலச் செய்யாது என்ற எண்ணத்துடன் அணுகுண்டு சோதனைகளை செய்தது முதல் தவறு.

அதேபோல் காஷ்மீர் மக்கள் எதிர்ப்புக் காட்ட மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது இரண்டாவது தவறு.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.