ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

சென்னை சென்ட்ரலில் இருந்து கா்நாடக மாநில நகா்களுக்கு செல்லும் சில விரைவு ரயில்கள் வரும் ஜூன், ஜூலையில் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில்.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:34 pm

சென்னை சென்ட்ரலில் இருந்து கா்நாடக மாநில நகா்களுக்கு செல்லும் சில விரைவு ரயில்கள் வரும் ஜூன், ஜூலையில் தாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வரும் ஜூனில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாகச் செல்லும் அசோகாபுரம் காவேரி விரைவு ரயில் (எண் 16021) வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாவும், வரும் ஜூன் 19- ஆம் தேதி வழக்கமான நேரத்திலிருந்து 1.40 மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டுச் செல்லும்.

வரும் ஜூன் 19 -ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் சிட்டி அதிவிரைவு ரயில் (எண் 12657) வழக்கமான நேரத்திலிருந்து 1 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும்.

மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் அசோகாபுரம் காவேரி விரைவு ரயிலானது வரும் ஜூன் 22 -ஆம் தேதி 1.22 மணி நேரம் தாமதமாகவும், 24 -ஆம் தேதி 1.30 மணி நேரம் தாமதமாகவும், ஜூலை 7 -ஆம் தேதி 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.