ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அமைச்சரையும் பாதுகாவலரையும் பொது இடத்தில் கத்தியால் குத்திய இளைஞர் 

இந்தோனேசிய அமைச்சர் ஒருவரையும் பாதுகாப்பிற்கு வந்திருந்த காவலரையும் பொது இடத்தில இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

இந்தோனேசிய அமைச்சருக்கு கத்திக்குத்து

Updated On :10 அக்டோபர் 2019, 10:21 am

ஜகார்தா: இந்தோனேசிய அமைச்சர் ஒருவரையும் பாதுகாப்பிற்கு வந்திருந்த காவலரையும் பொது இடத்தில இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசிய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறையில் அமைச்சராகப் பணியாற்றி வருபவர் விராண்டோ. இவர் வியாழனன்று  பாண்டேன் மாகாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அவர் தனது வாகனத்தில் வந்து இறங்கிய போது இளைஞர் ஒருவர் தன கையில் வைத்திருந்த கத்தியால் அமைச்சரை வயிற்றில் தாக்கினார். அதைத் தடுக்க முயன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒருவருக்கு ம்  முதுகில் குத்து விழுந்தது.

சுதாரித்த அமைச்சர் மற்றும் அருகிலிருந்தவர்கள் அந்த இளைஞரையும் அவருடன் வந்திருந்த அவரது மனைவியையும் மடக்க பிடித்துக் கைது செய்தார்கள். காயமடைந்த அமைச்சர் விராண்டோ மற்றும் காவல்துறை அதிகாரி இருவரும்  பண்டெக்லாங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவையில் இணைவதற்கு முன்பு பாதுகாப்பு படையில் விராண்டோ பணியாற்றி வந்த போது, 1998-ஆம் ஆண்டு நடந்த மாணவர் புரட்சியை ஒடுக்குவதிலும், 1999-ஆம் ஆண்டு நடந்த கிழக்கு தைமூர் பிரிவது தொடர்பான ஓட்டெடுப்பின் போதும் மனித  உரிமை மீற்ல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.