பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தேர்தல் தொடர்பான ஒளிபரப்புகளுக்கு தடை: பாகிஸ்தான் ஊடக ஆணையம் உத்தரவு

பாகிஸ்தானில் தேர்தல் தொடர்பான ஒளிபரப்புகளுக்கு தடை விதித்து அந்நாட்டு மிண்ணனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2018, 9:42 am

பாகிஸ்தானில் தேர்தல் தொடர்பான ஒளிபரப்புகளுக்கு தடை விதித்து அந்நாட்டு மிண்ணனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு டான் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

கடந்த 23-ஆம் தேதியுடன் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரங்களும் முடிவடைந்தது. இதையடுத்து தேர்தல் பிரசாரங்களில் குறிப்பிட்ட கட்சிகள், அரசியல் தலைவர்களின் பேச்சு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் அடங்கிய தொகுப்புகளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு ஊடகங்களில் ஒளிபரப்ப புதன்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வாக்காளர்களை கவரும் விதமான அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், பட்டிமன்றங்கள், தேர்தல் கருத்துக்கணிப்புகள் உள்ளிட்டவைகளை ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.