பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

படுகொலை செய்யப்பட்ட பெனாஸீர் பூட்டோ மகள்கள் வாக்களித்தனர்

படுகொலை செய்யப்பட்ட மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாஸீர் பூட்டோவின் மகள்கள் அங்கு நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் வாக்களித்தனர்.

News image
Updated On :25 ஜூலை 2018, 12:31 pm

படுகொலை செய்யப்பட்ட மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாஸீர் பூட்டோவின் மகள்கள் அங்கு நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் வாக்களித்தனர்.

கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் தற்போது தான் 2-ஆவது முறையாக பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சுமார் 106 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அங்கு எந்தவொரு பிரதமரும் இதுவரை 5 ஆண்டுகள் வரையிலான தனது  முழு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்தது கிடையாது.  

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் பெனாஸீர் பூட்டோவின் மகள்கள் பக்தவார் பூட்டோ சர்தாரி மற்றும் அசீஃபா பூட்டோ சர்தாரி ஆகியோர் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் இருவரும் வாக்களித்த மையுடன் செல்ஃபீ வெளியிட்டனர். 

அதில், பிடிஐ கட்சித் தலைவர் இம்ரான் கான் குறித்து கடுமையாகச் சாடியுள்ளனர். பாகிஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய தடையாக இருப்பது இம்ரான் கான் தான் எனவும், அவர்தான் கடந்த 2006 முதல் தற்போது 2016 வரை அதை தாக்கல் செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும், தற்போது தாலிபன் ஆட்சிமுறையை ஏற்படுத்த முனைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாகிஸ்தானில் பெண்களுக்கான ஜனநாயகம் வெற்றிபெற வேண்டும் எனவும் அதில் பதிவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.