இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை இடையே செப்.6 சந்திப்பு
இந்தியா, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையே செப்டம்பர் 6-ஆம் தேதி தில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.


இந்தியா, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு இடையே செப்டம்பர் 6-ஆம் தேதி தில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோரிடையே செப்டம்பர் 6-ஆம் தேதி தில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதில் இருநாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் இவ்விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008-ல் இரு நாடுகளுக்கு இடையில் எந்தவொரு ஒப்பந்தங்களும் ஏற்படாத நிலையில், தற்போது 2018-ஆம் ஆண்டில் 18 பில்லியன் அளவிலான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதை மேலும் அதிகரிக்க விரும்புவதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா, அமெரிக்கா இடையே 2017-ஆம் ஆண்டில் 12 பில்லியன் அளவில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் 126 பில்லியன்களாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கினால் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...