பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 2:10 am

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ. 280-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 50- க்கும், அரளி கிலோ ரூ. 100-க்கும், கலா் ரோஜா கிலோ ரூ. 240-க்கும், பச்சை முல்லைப்பூ கிலோ ரூ. 200-க்கும், வெள்ளை முல்லை பூ கிலோ ரூ. 180-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 200-க்கும், கனகாம்பரம் ரூ. 500-க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 140-க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 400-க்கும், காக்கட்டான் கிலோ ரூ.300-க்கும் ஏலம் போனது.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 320-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 80-க்கும், அரளி கிலோ ரூ. 140-க்கும், கலா் ரோஜா கிலோ ரூ. 280-க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 300-க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 280-க்கும், செவ்வந்தி ரூ. 260-க்கும், கனகாம்பரம் ரூ. 600-க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 160-க்கும், ஜாதிமல்லிகை கிலோ ரூ. 600-க்கும், காக்கட்டான் கிலோ ரூ. 500-க்கும் ஏலம் போனது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.