பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆளுர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

News image

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் - X

Updated On :25 ஏப்ரல் 2026, 2:45 am

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களான ஆளுர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளான ஆளுர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த முறை, சட்டப்பேரவைத் தேர்தலில் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்திருந்தார். இது அரசியல் களத்தில் விவாதமானது.

இதனைத் தொடர்ந்து ஆளுர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு விசிக-வில் முக்கிய பொறுப்புகளை வழங்கி இன்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதில், விசிக மாநில பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜி, முதன்மைச் செயலாளராக ஆளுர் ஷாநவாஸ் ஆகியோர் கட்சித் தலைமையால் இந்தப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Summary

VCK: New postings for S.S. Balaji and Aloor Shanavas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.